Category Archives: இந்தியா

தேசிய அளவில் தமிழகக் கல்லுரிகள் முதலிடம்!

தேசிய அளவில்  கல்லூரிகளின் தரவரிசையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் நூறு இடங்களில் 37 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது தமிழகம். தேசிய அளவில் முதல் 10 இடங்களில் மூன்று இடங்களை தமிழகக்கல்லுரிகள் பெற்றுள்ளன. அதே போல் தேசிய அளவில்  தமிழகக் கல்லூரியான சென்னை லயோலா இரண்டாம் … Continue reading

Posted in இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, Uncategorized | Tagged , , , , , , , , , | Leave a comment

டோனி பட நாயகன் சுசாந்த்தின் கோபம்

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தவர் சுசாந்த் சிங் ராஜ்புத். இவர் இயக்குனர் பன்சாலி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அவர் மீது ராஜ்புத் சமூகத்தினர் தாக்குதல் நடத்தியதையறிந்து அதிர்ச்சி அடைந்தார். முன்னதாக தனது பெயருடன் ராஜ்புத் என்ற சமூக பெயரையும் இணைத்தே பயன்படுத்தி வந்தார். சமீபத்தில் பன்சாலி மீது ராஜ்புத் சமூகத்தினர் … Continue reading

Posted in இந்தியா, சினிமா, செய்திகள், Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

பிகாரில் முழு மதுவிலக்கு: சொன்னதை செய்த நிதிஷ்!

கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக லாலுவும், நிதிசும் ஒன்றாக இணைந்து பாஜகவை தோற்கடித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தனர். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ் கொடுத்த வாக்குறுதி தான் பூரண மதுவிலக்கு.  ஆட்சிக்‌கு வந்ததும் 2016 ஏப்ரல் முதல் பீகாரில் முழுமையான மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்றார். இந்நிலையில் பீகாரில் மார்ச் … Continue reading

Posted in இந்தியா, செய்திகள், Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

கடன் நெருக்கடியால் கர்நாடக விவசாயி தற்கொலை

இந்தியாவில் விவசாயிகள் விவசாயக் கடன் கட்ட முடியாமல் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த நிலை சமீபமாக அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா மாவட்டம் கோரலகுண்டா கிராமத்தைச் சார்ந்த விவசாயி சிறீகாந்த தனது தோட்டத்தில் 3 ஏக்கர் அளவில் தக்காளி பயிரிட்டிருந்தார். தனது ஊரிலுள்ளவர்களிடம் தனிநபர் கடனாக வட்டிக்கு ரூ. 2 இலட்சம் வாங்கியிருந்தார். … Continue reading

Posted in இந்தியா, செய்திகள், Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

மேட்ச் பிக்சிங்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் சட்ட மன்றத் தேர்தலில் போட்டி!

ராஜஸ்தான் ராயல்ஸ் என்ற ஐபிஎல் அணியில் விளையாடிய போது மேட்ச் பிக்ஸிக் குற்றம் செய்ததால் கடந்த 2013 மே 16 அன்று சிறீசாந்த் கைது செய்யப்பட்டார். அவர் மீது நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், மோசடி போன்ற கிரிமினல் பிரிவுகளின் படி வழக்கும் பதியப்பட்டது. பின் அவர் பிணையில் வெளிவந்துவிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்ததும் அவர் மீதான் வழக்குகள் … Continue reading

Posted in அரசியல், இந்தியா, செய்திகள், விளையாட்டு, Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

கழிவறை கட்டாததால் மனைவியை பிரிந்து தவித்த கணவன்! கழிவறையை திறந்து வைக்க வந்த மனைவி!

திருமணம் முடிந்து கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் 19 மாதங்களாக கணவரை பிரிந்து இருந்த பெண் தற்போது, கழிவறை கட்டி முடிக்கப்பட்டதால் மீண்டும் கணவருடன் சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பீடல் மாவட்டம், ஷாபூர் கிராமத்தை சேர்ந்த மோகன் பாட்டீலுக்கும், ஹோஷங்கபாத் மாவட்டம் இடராஸி கிராமத்தை சேர்ந்த சீமா  பாட்டீலுக்கும் கடந்த … Continue reading

Posted in இந்தியா, செய்திகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

அன்புமணி மீதான ஊழல் வழக்குக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

2004 – 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலையீட்டின்பேரில், கடந்த 2009-ம் ஆண்டு லக்னோ நீதிமன்றத்தில் இருந்து … Continue reading

Posted in இந்தியா, செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டை விட மிகவும் ஆபத்தானது – விஞ்ஞானிகள் ஜனாதிபதிக்கு கடிதம்!

சென்னை கணித அறிவியல் நிறுவனம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 130 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.  கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது: மத ரீதியான வெறுப்புணர்வை வளர்த்து, மக்களை பிளவு படுத்தும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன. சகிப்புத்தன்மைக்கு எதிரான இந்த நிகழ்வுகள் … Continue reading

Posted in அறிவியல், இந்தியா | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக மூத்த விஞ்ஞானி அறிவிப்பு – நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என பேட்டி

அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையிலேயே பி.எம்.பார்கவா தனது பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறார். பி.எம்.பார்கவா இந்தியாவின் முன்னணி விஞ்ஞானியும் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனருமாவார். அவரது பேட்டியில், “நாட்டில் தற்போது நிலவும் சூழல் … Continue reading

Posted in அறிவியல், இந்தியா, செய்திகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

கேரள பவனில் மாட்டிறைச்சி சோதனை! – மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கண்டனம்

டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி சோதனை மேற்கொண்டதற்காக, டெல்லி காவல்துறையை மனிதநேய மக்கள் கட்சி கண்டித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா  வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் உள்ள கேரள பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறிய சில நபர்களுடன் டெல்லி போலீசார் கேரள பவனுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் … Continue reading

Posted in இந்தியா, சென்னை, செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment